புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தைலாபிஷேகம் இன்று தொடங்கியது.
தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அம்மன் புற்று மண்ணால் உருவானதால் அபிஷேகம் எதுவும் நடைபெறாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலாபிஷேகம் நடைபெறும். அதேபோல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தைலாபிஷேகம் தொடங்கியது.
முன்னதாக பட்டுத் துணி, நவதானியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்றது. 48 நாள்கள் நடைபெறும் இந்த தைலாபிஷேகத்தைக் காண தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI